உலகம்

மத்திய அரசின் தடை எதிரொலியாக அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு - நீண்ட வரிசையில் காத்திருந்து மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்லும் மக்கள்.

இந்தியாவில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக மக்கள் தொகையில் பாதி பேரின் உணவுத்தேவையை அரிசி பூர்த்தி செய்து வருகிறது. அவர்களுக்கு தேவைப்படும் அரிசி, 90 சதவீதம் ஆசியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரிசி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகளவில் ஏற்றுமதியாகும் அரிசியில், 40 சதவீதம் இந்தியாவின் பங்கு ஆகும். சீனா, பெனின், செனிகல் மற்றும் டோகோ உள்ளிட்ட நாடுகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன. சமீப நாட்களாக, இந்தியாவில் வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் 80 சதவீதம் தடைபடக்கூடும். இதனால், உள்நாட்டில் விலை குறையும். சர்வதேச சந்தையில் அதன் விலை உயரும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் அரிசி ஏற்றுமதி தடை எதிரொலியாக பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க, கனடா,சிங்கபூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.அமெரிக்காவில் உள்ள பல்வேறு சூப்பர் மார்கெட்டுகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பல மாதங்களுக்கு தேவையான அரிசியை வாங்கிச்செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டும் வழங்கப்படும் என சூர்ப்பர் மார்க்கெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது..! அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கினார்..!!

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்நாட்டின் 'தி கிராண்ட கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்' என்ற உயரி விருது வழங்கப்பட்டது. இந்த விருதி அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கி மோடியை கவுரவித்தார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று (ஜூலை 14) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விருந்தளித்தார்....

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் தேசிய தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரான்சில் தேசிய தினம் நாளை கொண்டாடப்படுகிறது.இதில் கெளவுர விருந்திரனாக கலந்து கொள்ள அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற பிரதமர் இன்று விமானம் மூலம் பிரான்ஸ் சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு, எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ...

இலங்கைக்கு மூட்டை மூட்டையாக பீடி இலை கடத்தல் - போலீசார் விசாரணை

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற் பகுதியில் இலங்கைக்கு பீடிஇலைகளை கடத்த முயன்று பின்னர், நடுக்கடலில் குதித்து தப்பித்து ஓடிய கடத்தல் கும்பல் யார் என கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இந்நிலையில் இன்று தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ...

ஸ்வீடன் நாட்டு இளைஞரை கரம்பிடித்த மதுரைப்பெண் – தமிழ் கலாச்சாரப்படி நடைபெற்ற காதல் திருமணம்...!

மதுரையைச் சேர்ந்த ஐ.டி நிறுவன பெண் ஊழியர், ஸ்வீடன் நாட்டு இளைஞரை பெற்றோர் சம்மதத்துடன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்டார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. இவரது தந்தை திருச்செல்வன் எல்ஐடியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஸ்வீடன் நாட்டில் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் நிவேதிதா பணிபுரிந்து வந்தார். அவருடன் அதே நகரைச் சேர்ந்த எட்வர்ட் வீம் என்பவரும் பணிபுரிந்துள்ளார். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். அப்போது, தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பற்றி எட்வர்ட், நிவேதிதாவிடம் கேட்டுத் தெரிந்துள்ளார். இதில் தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது எட்வர்ட்டுக்கு ஏற்பட்ட ஆர்வமும், ஈர்ப்பும் நிவேதிதா மீதும் ஏற்பட்டது. இதனையடுத்து, நிவேதிதாவிடம் தனது காதலை அவர் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர, இதற்கு பெற்றோர் ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்வோம் என்பதில் பிடிவாதமாக இருக்கவே, பெற்றோர்கள் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டினர். இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் இவர்களது திருமணம், தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் முறைப்படி இன்று நடந்தது. தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓத மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தாய்மாமன்கள் முன்னிலையில் தாலி கட்டினார். இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளை எட்வர்ட் குடும்பத்தினர் 70 பேர், விமானத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பே மதுரை வந்தனர். அவர்கள், திருமணத்திற்கு முந்தைய இடைப்பட்ட நாட்களில் தமிழ் வழக்கப்படி நடக்கும் திருமணங்களை கேட்டு தெரிந்து கொண்டு, அதன்படி, மாப்பிள்ளை-மணப்பெண் நிச்சயதார்த்தம், மணப்பெண் - மணமகன் அலங்காரம், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நடத்தினர். ஸ்வீடனில் இருந்து வந்த மாப்பிள்ளை எட்வர்டு குடும்பத்தினர், தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து இந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுடன் அவர் ஆட்டம், பாட்டத்துடன் இரு வீட்டாரும் வெவ்வெறு நாட்டினரை என்பதை மறந்து மொழி, மதம், இனம், கலாச்சாரத்தை தாண்டி கொண்டாடினர். திருமணத்திற்கு பிறகு, மறு வீடு விருந்து, பங்காளி வீட்டு விருந்து தொடர்ந்து தேனிலவு சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளையும் மதுரையிலே நடத்த இரு வீட்டாரும் திட்டமிட்டுள்ளனர்....

23வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - பிரதமர் மோடி உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2001ம் ஆண்டு ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பினை உருவாக்கின. ...

வாழைப்பழத்தை தராமல் வெறுப்பேற்றிய பெண்ணை...முட்டி தூக்கி வீசிய யானை வைரல் வீடியோ!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவானது யானைக்கு வாழைப்பழம் தர முயன்ற பெண் தராமல் வெறுப்பேற்றியதால் கடுப்பான யானை அந்த பெண்ணை தும்பிக்கையால் தூக்கி வீசியது தான். அந்த வீடியோவை IFS அதிகாரி சுஷாந்தா நந்தா சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் "யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள்" என்றும் பதிவிட்டுள்ளார்....

வேலைக்கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியா? என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை!

உலகளவில் கொரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. அதிலும் சீனாவில் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், சீனா அரசாங்கம் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த பாலிசி மூலமாக பாதிக்கப்பட்ட இடங்கள் முழுமையான ஊரங்குப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் பட்டதாரிகளை விட முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்க சூழல் நிலவுவதால், வேலை கிடைக்காத காரணத்தால் இளைஞர் பலரும் மனவேதனையில் இருக்கிறார்களாம். எனவே, மனதை அமைதிப்படுத்தவும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சீன இளைஞர்கள் வழிபாட்டு தலங்களில் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டை விட கோவிலுக்கும் செல்லும் இளம்தலைமுறையினரின் எண்ணிக்கை தற்போது 310 சதவிகதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எல்லாம் கைவிட்ட பிறகு கடவுள் ஒன்றே துணை அல்லவா!...

விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்க் "ஸ்டார்ஷிப்" ராக்கெட் வெடித்து சிதறல்!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியது. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனம் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டு வருகிறது. அவர்களின் முக்கிய இலக்கே மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான். ...

மறுபடியும் முதல்ல இருந்தா..? சீனாவில் பறவைக் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் பேரிழப்பு ஏற்பட்டது. இன்று வரை பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் சீனாவில் இருந்து பறவைக் காய்ச்சலுக்கு முதல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பறவைக் காய்ச்சலானது, எச்3என்8 என்ற வைரஸால் ஏற்பட்டுள்ளது....

தற்போதைய செய்திகள்