இந்தியா

பழிவாங்கும் எண்ணம்...ஒரே குடும்பத்தை சேர்ந்த...6 பேர் சுட்டுக் கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரீனா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் சிஹோனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெபா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராய் சிங் நர்வாரியா கூறுகையில், "2013-ம் ஆண்டு தீர் சிங்குக்கும், கஜேந்திர சிங்கின் மகன்களுக்கும் இடையே காலி நிலத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக அடிக்கடி வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது. இது காலப்போக்கில் சண்டையாக மாறி இறுதியில் இரண்டு குடும்பத்தினரும் "பகை" உணர்வில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ...

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு...குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை...இது தான் தீர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து மேல்முறையீடு இன்று குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 2019 லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மிகவும் விறுவிறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது 2019 ஏப்ரலில் கர்நாடகாவின் கோலாரில் நடந்த பேரணியில் ராகுல் அவர்கள், "எல்லா திருடர்களுக்கும் மோடி என்பதை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்?" என்று பகிரங்கமாக விமர்ச்சித்துள்ளார். ...

யூடியூப் பார்த்து கோடி கோடியாய் கொள்ளையடித்த மாணவர்கள்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஓம் பிரகாஷ். மர்ம நபர்கள் நான்கு பேர் இவரது வீட்டில் புகுந்து மனைவி, மகள் போன்றோரைக் கட்டிப் போட்டுள்ளனர். இதில் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்து லாக்கர் சாவியைப் பெற்று, பீரோவில் இருந்த 1 கோடி மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரித்த போது பாலிடெக்னிக் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

வாயு கசிவால் 11 பேர் துடிதுடித்துப் பலியான சம்பவம்.. ஊதா நிறத்தில் மாறிய உடல்கள்..!

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் பால் பொருள்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்ட் மற்றும் குளிரூட்டும் அமைப்பு போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் விஷத்தன்மை கொண்ட வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தொழிற்சாலை அருகே வசிப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. இதில் அவர்களின் உடல் முழுவதும் ஊதா நிறத்தில் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது....

ட்ரிபிள் ரைடிங் இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு தர வேண்டும்!

கேரளாவின் முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் நலன் கருதி இருசக்கர வாகனங்களில் 3 பேர் செல்லும் ‘ட்ரிபிள் ரைடிங்’ குற்றத்துக்கு ரூ.1,000 அபராதம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் அரசின் மதித்த மக்கள் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்....

கனமழை வெளுக்கப்போகுது.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 3 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கேரளாவில் உள்ள எர்ணாகுளம், பாலக்காடு, மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கன மழை தொடரும் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு பி.டி.உஷா இப்படி பேசுவாங்கனு எதிர்ப்பார்க்கல.. வீராங்கனைகள் பரபரப்பு..!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தி அதன் அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. ஆனால், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் மல்யுத்த வீரர்கள் கோபம் அடைந்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி ஜந்தர் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் பேசியதாவது, "மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராடுவது நாட்டின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் முதலில் எங்களை தான் அணுகியிருக்க வேண்டும். எங்களிடம் தீர்வு கிடைக்காவிடில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். நேரடியாக தெருக்களில் இறங்கி போராடுவது விளையாட்டு வீரர்களுக்கு அழகல்ல. எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு எந்தவித பிரச்சினையும் வரக்கூடாது என்று தான் விரும்புகிறோம். சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிபலிக்கும் எந்த ஒரு வீரருக்கும் உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம். அவர்கள் நமது சட்டங்கள், விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இதை கேட்ட சக வீராங்கனைகள் பி.டி.உஷாவின் பேச்சு பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு பெண்ணாக, முன்னாள் விளையாட்டு வீரராக இருந்து கொண்டு இப்படி பேசலாமா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்....

மனைவியை துண்டாக வெட்டி...உடலை எரித்த கொடூரம்...கணவன் கைது!

அரியானா மாநிலம் மானேசர் மாவட்டம் குக்டோலா கிராமத்தில் உமைத் சிங் என்பவர் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாள் அவரின் பண்ணையில் புகை மூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு ஒருவர் சிங்கிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உமைத் சிங் காவல் துறையினருக்கு தகவல் சொல்லி அவர்களுடன் பண்ணைக்கு வந்தார். அப்போது அங்கு தலை மற்றும் கை இல்லாமல் எறிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது....

வயலில் வேலை செய்யும் போது....மின்னல் தாக்கி 14 பேர் பலி!

மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று மேற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. அதில் பெரும்பாலும் கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட தெற்கு வங்காள மாவட்டங்களில் தான் மழை பெய்தது....

அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்.. பதற்றத்தில் மக்கள்...!

நேபாளத்தில் தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட துருக்கி நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று இரவு நேபாளத்தில் தொடர்ந்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....

தற்போதைய செய்திகள்