தமிழ்நாடு

தக்காளி விலை உச்சம் - அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த சில மாதங்களாக காய்கறி சந்தைகளில் காய்கறி வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சில்லறை வர்த்தகத்தில் தக்காளி கிலோ ரூ.200க்கு அதிகமாக விற்பனையாகிறது. எனவே, தக்காளி விலை அதிகரிக்கும் காரணம், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறை, தக்காளி விலை நிர்ணயம் குறித்து அதிகாரிகளிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இதன் மூலம் தக்காளி விலை குறைப்பதற்கான வழியை கூடிய விரைவில் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

கோர விபத்து...லாரி மீது கார் மோதி...உடல் நசுங்கி 4 பேர் மரணம்!

நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருமங்கலம் - விருதுநகர் நான்குவழிச்சாலையில் செல்லும் போது, கள்ளிக்குடி விளக்கு பகுதியில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி பறந்து சென்றுள்ளது. அப்போது சாலையின் மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் என்று மொத்தம் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காரில் வந்தவர்கள் தேங்கன்குழிவிளையை சேர்ந்த சம் டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

மகளிர் உரிமைத் தொகை திட்டம்...விண்ணப்ப படிவம் வாங்கலைன்னா...ஆகஸ்ட் 1 வாங்குங்க!

தமிழக அரசின் அறிவிப்பின் படி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும். அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் இந்த சலுகையை வாங்க பெண்களுக்கு கடந்த 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் 24 ஆம் தேதி கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடைபெற்றது....

ஹாப்பி நியூஸ்! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி புகழ்பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி விழா அரசு விழாவாக வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகை செடிகள் கண்காட்சி ஆகியவை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 02 மற்றும் 03 ஆம் தேதிகளில் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 03 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், ஆகஸ்ட் 01, 02 மற்றும் 03 ஆகிய மூன்று நாட்களுக்கு கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மூன்று நாட்களில் கடையை திறந்தாலோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்வது தெரிய வந்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்....

இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனம் - வழக்குச் செலவு ரூ.25 ஆயிரம் வழங்க அதிரடி உத்தரவு.

கொரோனா சிகிச்சைக்கு செலவான தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரருக்கு வழக்குச் செலவாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற பொற்கமலம் என்பவர், 2014ம் ஆண்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக அவரது ஓய்வூதியத்தில் மாதந்தோறும் 350 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பாதித்த அவர், தென்காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக செலவான 2 லட்சத்து 62 ஆயிரத்து 596 ரூபாயை புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திரும்ப வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படவில்லை எனவும், இணைப்பில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து பொற்கமலம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காததால், இன்சூரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படாத தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்ட நிலையில், 73 வயதான ஓய்வூதியதாரருக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல் மனிதத்தன்மையற்றது என கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிர பாதிப்பு இல்லாத போதும், இணைப்பு பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தாலும் மருத்துவ செலவுகளை கோர அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளதாக 2022 ஜூன் மாதம் அரசு பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, மருத்துவ செல்வுகளை வழங்கக் கோரி மீண்டும் விண்ணப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்று தாமதமின்றி மருத்துவ செலவை வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், 73 வயது ஓய்வூதியதாரரை நீதிமன்றம் நாடச் செய்த இன்சூரன்ஸ் நிறுவனம், மனுதாரருக்கு வழக்குச் செலவாக 25 ஆயிரம் ரூபாயை மூன்று வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளார்....

மணிப்பூரைப் போல கலவரம் இல்ல.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது..! - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

மணிப்பூரைப் போல கலவரமாக இல்லாமல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் தி.மு.க., சார்பில் கலைஞர் நூற்றாண்டு மாளிகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியாதவது, சட்டமன்ற தேர்தலில் 13 முறை போட்டியிட்டு 11 முறை என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். எப்படி நீங்கள் ஒரே தொகுதியில் இத்தனை முறை ஜெயித்தீர்கள் என்று என்னை கேட்பார்கள். அவர்களுக்கு நான் சொல்வது என்றைக்கும் என்னுடைய தொகுதி காட்பாடி தொகுதி தான். என்னை தி.மு.க., காரனாக்கியது கழிஞ்சூரை சேர்ந்த ஆசிரியர் தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தார் கலைஞர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 36 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார். தாய்குலம் என்றும் தழைக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை ரூ ஆயிரத்தில் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.ஆயிரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. கலைஞர் பள்ளி பிள்ளைகளுக்கு மதிய உணவை 2 முட்டைகளும் வழங்கினார். மு.க ஸ்டாலின் வந்தவுடன் அவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்கு சென்றாலும் காலையில் மாணவர்களுடன் சிற்றுண்டி சாப்பிடுகிறார். அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் படிக்க வைக்க இலவச பஸ் பாஸ் உள்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. காட்பாடி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மருத்துவமனை, கல்லூரி கொண்டு வருவேன்னு சொன்னேன். அதன்படி கொண்டு வந்துள்ளேன். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் நமக்கு வர வேண்டும். அதற்காக டெல்லி சென்று மத்திய மந்திரியை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்துள்ளேன். நான் எங்கு சென்றாலும் காட்பாடி தொகுதி மக்களுக்கு என்னுடைய கடைமையை செய்ய தவறுவதில்லை. தமிழகத்தில் எந்தவிதமான சட்டம் ஒழங்கு பிரச்சனை இல்லை. மணிப்பூரைப் போல கலவரம் இங்கு இல்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்....

புலியை கண்டு பூனைகள் பயப்படலாம்.. பூனையைக் கண்டு புலிகள் பயப்படுமா..? - I.N.D.I.A கூட்டணி குறித்து கிருஷ்ணசாமி கிண்டல்

புலியை கண்டு பூனைகள் பயப்படலாம் ஆனால், பூனையை பார்த்து புலிகள் பயப்படுமா என்ன என்று எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியாதவது, மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மிகவும் கண்டனத்திற்குரியது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள்தான் நடக்காமல் இருக்க ஒரு கமிட்டி அமைத்து விரைவு சிறப்பு நீதிமன்ற ஆணையம் அமைக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பேசுகிறோம். மற்றபடி அந்த சம்பவம் பற்றி பேச மறந்து விடுகிறோம். 19 மதுபான ஆலைகளில் 17 ஆலை திமுக வினருடைது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கர்நாடகா வழங்க வேண்டிய ஜூன் மாதம் இரண்டு டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் மற்றும் உபரிநீராக முப்பது டிஎம்சி தண்ணீர் வழங்கவில்லை. இது குறித்து முதல்வர் எதுவும் கூறவில்லை. மோடிக்கு எதிராக திமுகவினர் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகாவில் தண்ணீர் தர மறுக்கின்றனர். உச்சநீதிமன்றம் காவிரி ஆணையம் கொடுத்த தீர்ப்பை ஏற்க மறுக்கின்றனர். 2016 கலைஞர் தலைமையில் தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என கோரித்தான் பிரச்சாரம் செய்தோம். தேர்தல் அறிக்கையில் கலைஞரே அறிவித்தார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். மது ஒழிப்பு பிரச்சாரத்தில் சசிகுமார் உயிரிழந்தார். மது உணவு மல்ல. மருந்தும் அல்ல அது 220 நோய்களை உருவாக்குகிறது. மது ஒரு விஷம். அது காலையில் சாப்பிட்டாலும் மதியம் சாப்பிட்டாலும் மாலையில் சாப்பிட்டாலும் விஷம் கேடு விளைவிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி பற்றிய கேள்விக்கு புலியை கண்டு பூனைகள் பயப்படலாம். ஆனால், பூனையைக் கண்டு புலிகள் பயப்படுமா? . இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்....

நாட்டில் பிரதமர் இருக்கிறாரா.. இல்லையா..? - மணிப்பூர் சம்பவம் தொடர்பாக முத்தரசன் கேள்வி

மணிப்பூர் சம்பவத்தை பார்க்கும் போது நாட்டில் பிரதமர் இருக்கிறாரா?, இல்லாயா? என்ற கேள்வி எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியுள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியாதவது, மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ள கொடூரமான சம்பவம். மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடந்தியிருந்தால் இத்தகைய பெரிய சம்பவங்கள் மணிப்பூரில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. உலகநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விருதுகளை வாங்கி கொள்ளும் பிரதமர் மோடி சொந்த நாட்டு மக்கள் கொலை செய்யப்படும் போது மெளனமாக இருந்தார். உச்சநீதிமன்ற தலையீட்டால் பிரதமரின் உதடுகள் மணிப்பூர் விவகாரத்தில் அசைந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய பிரதமர் அச்சப்படுகிறார். மணிப்பூர் கலவரத்தை பிரதமர் விரும்புகிறாரா என தெரியவில்லை. மணிப்பூர் சம்பவத்தை பார்த்தால் நாட்டை பிரதமர் ஆளுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து 25ம் தேதி நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல் நடைபெறும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள உள்ளேன். அதிமுக ஆட்சியின் போது குட்கா ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை ஊழல் கூட்டணி என பிரதமர் விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தவறால் கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டது. நேரு குடும்பம், கர்நாடக காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் மீது ரெய்டு விடப்படுகிறது. எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த, உடைக்க, குழப்பம் ஏற்படுத்த அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பயன்படுத்தப்படுகிறது. மோடி ஆட்சியில் மக்களின் நம்பிக்கையான நீதிமன்றமே கேள்விக்குறியாகி விட்டது. விலைவாசி உயர்வுக்கு காரணம் மாநில அரசா ஒன்றிய அரசா. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தான் எல்லா பொருட்களின் விலையும் உயரும். அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி விலைவாசியை குறைக்க வேண்டும். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்....

நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுடன் புது பானையும் சேர்த்து வழங்க வேண்டும்..! - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொங்கல் திருநாளில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுடன் புது பானையும் சேர்த்து வழங்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சேம. நாராயணன் தெரிவித்தார். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சேலம் ரோட்டரிஅரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சேம.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் சேம. நாராயணன் பேசியாதவது, தமிழகம் முழுவதும் 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். மண்பாண்ட தொழிலாளர்கள் பருவ மழை பெய்கின்ற காலத்தில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாது நிலை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் மழை கால நிவாரண உதவியாக மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். மண்பாண்ட தொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்க கூடிய மின்சக்கரம் இலவசமாக வழங்குவதோடு மண்பாண்ட தொழில் செய்யும் நேரத்தில் இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு, நியாய விலை கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் போது, புது பானையும் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் சிறப்புகள் குறித்து பள்ளி புத்தகத்தில் ஒரு பாடப் பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நல வாரிய சட்டங்களை முடக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏரி ,குளம் குட்டைகளில் இலவசமாக மண் அள்ளிக் கொள்ள அரசு , மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது. இவ்வாறு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சேம. நாராயணன் பேசினார்....

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் முக்கியமில்லை..! - எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்

எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் எடப்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் காவடிக்காரனூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதவது, தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டுவந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கியதே விடியா திமுக அரசின் சாதனை. வரிப்பணத்தில் ரூ.82 கோடியில் கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் தேவையான என மக்கள் கேள்வி கேட்கின்றனர். தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம். ஏனெனில் இரண்டும் ஒரே விலைதான் விற்கிறது. எடை கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் பார்த்துக்கொண்டோம். தமிழகத்தில் மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை. ஸ்டாலினுக்கு குடும்பம்தான் முக்கியம், மக்கள் முக்கியமல்ல. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை விடியா திமுக அரசு முடக்கிவிட்டது. மேட்டூர் அணை மற்றும் மற்றும் ஏரிகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை அள்ள அனுமதி வழங்கியது அதிமுக அரசு. வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தையும் திமுக அரசு முடக்கிவிட்டது. ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 ஏரிகள் புனரமைப்பு திட்டத்தையும் திமுக அரசு முடக்கிவிட்டது. முதியோர் உதவித்தொகையையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சியில் 234 தொகுதிகளிலும் தகுதியான முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்....

தற்போதைய செய்திகள்