மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட் தாக்களில் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக மக்களின் நலன் கருதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் மாணவர்களுக்கு விவசாயம் குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய ஆபத்தான விஷயம். எனவே, அவர்களுக்கு வேளாண்மையின் மகிமையை தெரிந்துக்கொள்ள கல்வி துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு பண்ணனை சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் நெற்பயிர்களை அதிகம் பெரும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதே போல நெற்பயிர்களோடு சேர்த்து சிறுதானியங்கள், பயறு வகைகள் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.