ஸ்டார் 3.0 திட்டம் அடுத்தாண்டு அமல்படுத்தப்படும்..! - அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.

By selvarani Updated on :
ஸ்டார் 3.0 திட்டம் அடுத்தாண்டு அமல்படுத்தப்படும்..! - அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.Representative Image.

செயற்கை நுண்ணறிவு, சான்றிட்ட நகல், வில்லங்க சான்றிதழை தானியங்கி முறையில் தயாரித்தல் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,

முன்னாள் முதல்வர் .கருணாநிதியால் பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக கடந்த 2000ம் ஆண்டு பிப் 6ம் தேதி முதல் ஸ்டார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை முன்னோடி துறையாக திகழ வைத்துள்ளது. பதிவுத்துறையின் அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பதிவுத்துறையின் கணினிமயமாக்கலில் முதல்வர் .ஸ்டாலின் உத்தரவின் படி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதன் அடிப்படையில் தற்போதுள்ள ஸ்டார் 2.0 தி்ட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகள் உட்புகுத்தப்படுகின்றன. சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்றிதழ் முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களை செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் ஸ்டார் 3.0 திட்டம் அடுத்தாண்டு முதல் அறிமுகப்படுத்த கடந்த ஜூலை 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கண்காணிக்க தலைமை செயலரின் தலைமையிலான மாநில அளவிலான குழுவும், செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைவர் தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.முழுமையான வன்பொருள், மென் பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படஉள்ள ஸ்டார் 3.0 திட்டமானது பதிவுக்கு வரும். பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான பாதுகாப்பான மற்றும் துரிதமான மற்றும் உயர் தரத்திலான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்