அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டா…தமக்கு எதுவும் தெரியாது..! - அமைச்சர் துரைமுருகன் பதில்

By Selvarani Updated on :
அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டா…தமக்கு எதுவும் தெரியாது..! - அமைச்சர் துரைமுருகன் பதில்Representative Image.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு செய்வது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 10 கோடி 81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட உள்விளையாட்டு அரங்கம் மற்றும் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டறிந்தார். மேலும் இது தொடர்பான விவரங்களை விரிவான அறிக்கையுடன் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புமாறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில்   குத்து சண்டை போட்டியில் பதினோராம் வகுப்பு மாணவி தங்கப் பதக்கம் வென்ற வேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெருஷா ஜாஸ்மின் என்ற மாணவி பாராட்டி சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளரிடம்  அமைச்சர் துரைமுருகன் பேசியாதவது,

காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தமிழகத்தின் முதல் விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வித விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு தேவையான தங்கும் விடுதிகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கத்துறை பொன்முடி வீட்டில் சோதனை செய்வது தமக்கு தெரியாது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்