தேனி மாவட்டம் காமயம் கவுண்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். கட்டிடத் தொழியாளியான இவர் தனது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சரவணனுக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால், இவர் எதற்காக இந்த விபரீத செயலில் ஈடுபட்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதனால், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது பிறப்புறுப்பையே அறுத்துக் கொள்ளும் அளவிற்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.