கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகத்திற்கு மத்திய அரசு வெளியிட்ட உத்தரவு.
சமீப காலமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் கொரோனா தோற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்தந்த மாநிலங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். மேலும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை ஒழுங்காக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப் பிரச்சனை அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காண்பித்துள்ளார். எனவே, மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் முடிந்த வரை சீக்கிரம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.