
கொரோனா அதிகரித்து வருவதால், இன்று முதல் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக, தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசானது, அனைத்து மாநில அரசுகளுக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக, கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், கேரள மாநில அரசு, கேரள மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.