அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவதரிக்கு சொந்தமான ஹெலிபிகாப்டர் விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசம் திராங் பகுத்தியில் சென்றுக் கொண்டிருந்த சீட்டா இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி மண்டாலா மலைப்பகுதியில் விழுந்தது. எதனால் இந்த விபத்து நடந்துள்ளது, ஹெலிகாப்டரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா குறித்து விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்த பைலட்டுகளை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வெடிப்பு சத்தம் மற்றும் புகையால் மக்கள் பெரும் பீதியில் இருந்ததாக கூறப்படுகிறது.