இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது, நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3016 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:
கேரளா - 686
மகாராஷ்டிரா - 483
இமாச்சலபிரதேசம் - 255
குஜராத் - 401
டெல்லி - 300
கர்நாடகா - 215
அரியானா - 120
தமிழ்நாடு - 112