முதல்வர் சென்ற கான்வாயை மறித்து விவசாயிகள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர முதல்வர் விழா ஒன்றில் கலந்து கொண்டு பிறகு, புட்டபர்த்தி நோக்கி முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த மாவட்டத்திற்கு வந்த பொழுது முதலமைச்சரின் கான்வாயைத் தடுத்து நிறுத்தி பெண்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை, பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்திற்காக, 210 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி விட்டு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.